• Fri. Nov 7th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தம் – வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் முழு விவரம்

Byadmin

Nov 7, 2025


தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் எப்படி நடக்கிறது?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இந்தப் பணிகள் எப்படி நடக்கின்றன, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர். – Special Intensive Revision – SIR) நவம்பர் 4ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி மொத்தம் 9 மாநிலங்களிலும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் இந்த எஸ்.ஐ.ஆர். பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பிகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர். பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.

தமிழ்நாட்டிலும் ஆளும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருந்தபோதும், தற்போது வாக்காளர் பட்டியலுக்கான இந்த சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக, 2002-2005 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையானது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாநிலம் முழுவதும் நடைபெறும்.

By admin