• Sun. Aug 24th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 19% அதிகரித்தது எப்படி?

Byadmin

Aug 24, 2025


நீலகிரி வரையாடு திட்டம்

பட மூலாதாரம், Getty Images

நீலகிரி வரையாட்டைக் காப்பதற்கு ரூ.25 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு, அது தமிழ்நாட்டின் மாநில விலங்கு என்பது மட்டும்தான் காரணமா?

”நீலகிரி வரையாட்டைக் காப்பது என்பது, தமிழ்நாட்டின் நதிகளின் தாய்மடியாக இருக்கும் புல்வெளிகளைக் காப்பது. அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் கார்பனை உள்வாங்கி மண்ணுக்குள் செலுத்தி, சூழலைப் பாதுகாக்கும் இயற்கையின் அற்புதமான புல்வெளிகளைக் காக்க வேண்டுமெனில் அவற்றை முக்கிய உணவாகவும், வாழ்விடமாகவும் கொண்டு வாழும் நீலகிரி வரையாட்டைக் காப்பது மிகஅவசியம்.”

இப்படி விளக்கம் அளிக்கிறார், வன உயிரின நிதியம்–இந்தியா (WWF-INDIA) அமைப்பின் மூத்த விஞ்ஞானி பால் பிரடிட்.

நீலகிரி வரையாட்டைக் காக்கும் முயற்சியாக செயல்படுத்தப்பட்டுள்ள நீலகிரி வரையாடு திட்டத்தின் ஒரு பகுதியாக, கேரளாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த கணக்கெடுப்பின் இரண்டாம் கட்ட அறிக்கையை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டை விட, 19 சதவிகிதம் நீலகிரி வரையாடுகள் கூடுதலாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin