• Sat. Feb 22nd, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் மும்மொழி விவகாரம்: தமிழ், ஆங்கிலம் படித்து முன்னேறியவர்கள் கூறுவது என்ன?

Byadmin

Feb 19, 2025


மும்மொழி சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டுக்கு மொழி சார்ந்த அரசியலும் சர்ச்சைகளும் புதிதல்ல. தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த ஒரு நூற்றாண்டில் பல மொழி சார் போராட்டங்களும் சர்ச்சைகளும் வெடித்திருக்கின்றன.

அந்த வகையில், “தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது?” என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.

”மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினில் தொடங்கி, திமுகவின் கூட்டணி கட்சிகள், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என பல தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாஜக தலைவர்கள் அதற்கு எதிர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

By admin