• Fri. Oct 31st, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக ஏன் எதிர்க்கிறது?

Byadmin

Oct 31, 2025


தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

‘மக்களின் வாக்குரிமையைப் பறிக்க பா.ஜ.கவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக இது அமைந்துள்ளது’ என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“ஆனால், அவ்வாறு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

பட மூலாதாரம், X/airnewsalerts

படக்குறிப்பு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

தீவிர திருத்தப் பணிகள் ஏன்?

மக்கள் இடம்பெயர்வது, விரைவான நகரமயமாக்கல், இளைஞர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவது, போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது ஆகியவை சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கமாக உள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் பிகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியது.



By admin