• Mon. Mar 16th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு ஒரு மாதத்திற்கும் மேலான அவகாசம் இருப்பது யாருக்கு சாதகம்?

Byadmin

Mar 16, 2026


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், திமுக - அதிமுக, தவெக, பாஜக

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கு ஒரு மாதத்திற்கும் அதிகமான அவகாசம் உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மறுபுறம் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

தேர்தலுக்கு புதுமுகமான விஜயின் தவெக தனித்து களம் காணுமா அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. நாம் தமிழர் கட்சி வழக்கம் போலவே தனித்து களம் காண்பதாக அறிவித்துள்ளது.

கள யதார்த்தம் இதுதான் என்கிற சூழலில், தேர்தல் அறிவிப்புக்கும் வாக்குப்பதிவுக்கு இடையே ஒரு மாதத்திற்கும் அதிகமான கால அவகாசம் இருப்பது யாருக்கு சாதகமாக இருக்கும்? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

2021–2026 பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு பற்றிய ஒப்பீடு

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்து விட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, பரப்புரையை நிறைவு செய்வதற்கு கடைசி நாளான ஏப்ரல் 21 வரையிலும் ஒரு மாதத்திற்கும் மேலாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு கால அவகாசம் உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 26-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கி, ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஆனால், கிட்டத்தட்ட 25 நாட்கள் கழித்து மே 2 ஆம் தேதி தான் வாக்குகள் எண்ணப்பட்டன.

By admin