• Thu. Dec 25th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் 2.40 லட்சம் தெருநாய்களுக்கு சிப் பொருத்துவதில் முறைகேடா? என்ன நடந்தது?

Byadmin

Dec 25, 2025


2.40 லட்சம் தெருநாய்களுக்கு சிப் பொருத்தும் டெண்டரில் முறைகேடு என குற்றச்சாட்டு - முழு பின்னணி

பட மூலாதாரம், Getty Images

“அவர்கள் இதுவரை யாருக்கும் மைக்ரோ சிப் விற்றதில்லை. விலங்குகளுக்கு சிப் பொருத்தும் பணியை மேற்கொண்டதாக எந்த ஆவணங்களும் இல்லை. ஆனால், அவர்களைத் தகுதிவாய்ந்த நிறுவனமாக அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்” எனக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த தினேஷ் சிங்கராயர்.

தமிழ்நாட்டில் 2.40 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

டெண்டரில் விதிமீறல் நடந்துள்ளதாகக் கூறி சிப் கொள்முதல் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தெருநாய்கள் தொடர்பான பிரச்னையில் கடந்த நவம்பர் 7 அன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

நாடு முழுவதும் பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

By admin