• Thu. May 22nd, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2,152 கோடி நிறுத்திவைப்பு – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Byadmin

May 22, 2025


இன்றைய முக்கியச் செய்திகள், மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், M K Stalin

இன்றைய (22/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கல்வி நிதியின் ஆண்டு பங்கினை நிறுத்தியிருப்பதாக குற்றம் சாட்டி, உச்ச‌ நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது என, தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், “சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 2025-2026ம் ஆண்டுக்கான கட்டாய 60% பங்களிப்பாக தமிழ்நாட்டுக்குச சுமார் 2,152 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. இது சமக்ரா சிக்ஷா திட்டம், கல்வி உரிமைச் சட்டம் 2009 அமலாக்கத்தை கடுமையாக பாதித்துள்ளது.

நிதி பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் 43,94,906 மாணவர்கள், 2,21,817 ஆசிரியர்கள் மற்றும் 32,701 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்ட அமலாக்க ஆணையத்தின் ஒதுக்கீட்டின்படி‌ மொத்தமாக 3585.99 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் செலவிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது.

By admin