• Sat. Nov 22nd, 2025

24×7 Live News

Apdin News

தர்மஸ்தலா வழக்கு: புகார் அளித்தவருக்கு எதிராகவே சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை – ஏன்?

Byadmin

Nov 22, 2025


புகார் கூறியவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அழைத்துச் சென்ற காட்சி

பட மூலாதாரம், Anush Kottary/BBC

படக்குறிப்பு, வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, புகார்தாரரை அவர் சடலங்களை புதைத்ததாகக் கூறிய 17 இடங்களுக்கு அழைத்துச் சென்றது.

தர்மஸ்தலா வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), முன்னாள் துப்புரவுத் தொழிலாளி சி.என். சின்னையா மற்றும் அவருடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு எதிராக 4,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இவர்கள் மீது, ‘பாலியல் வன்முறை மற்றும் கொலைக்குப் பிறகு பெண்களின் சடலங்களை சட்டவிரோதமாகப் புதைத்ததாக’ பொய்க் கதைகளை உருவாக்கியது மற்றும் போலி சாட்சிகளை உருவாக்கிய சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நுட்பமாகப் பார்த்தால் இந்த 4,000 பக்க அறிக்கை, ஆதாரமற்ற வழக்குகள் மற்றும் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதில் இருந்து நீதிமன்ற நடைமுறைகளைப் பாதுகாப்பதற்காக பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 215இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட புகாராகக் கருதப்படுகிறது.

சி.என். சின்னையா தவிர, கிரிஷ் மட்டன்னவர், மகேஷ் ஷெட்டி திமரோடி, டி. ஜெயந்த், விட்டல் கௌடா, சுஜாதா பட் ஆகியோரின் பெயர்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இவர்கள் மீது போலி சாட்சிகளை உருவாக்கியது, போலி ஆவணங்கள் தயாரித்தது, மற்றும் பிற சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

By admin