• Tue. Sep 9th, 2025

24×7 Live News

Apdin News

தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு தமிழக அரசு விளக்கம் | Why was a temporary DGP appointed

Byadmin

Sep 9, 2025


புதுடெல்லி: தமிழகத்​தில் தற்​காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்​தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்​பிய உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், நிரந்தர டிஜிபியை விரைந்து நியமிக்க உரிய நடவடிக்​கைகளை எடுக்க யுபிஎஸ்சி மற்​றும் தமிழக அரசுக்கு உத்​தர​வி்ட்​டுள்​ளனர்.

இதுதொடர்​பாக மனித உரிமை​கள் செயற்​பாட்​டாள​ரான மதுரையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த அவம​திப்பு வழக்​கில், தமிழகத்​தில் டிஜிபி​யாக பதவிவகித்த சங்​கர் ஜிவாலின் பதவிக்​காலம் முடிவடைந்து விட்டது. அவரது பதவிக்​காலம் முடிவடைவதற்கு 3 மாதங்​களுக்கு முன்​பாகவே அடுத்த டிஜிபிக்​கான பரிந்​துரைப் பட்​டியலை தமிழக அரசு யுபிஎஸ்​சி-க்கு அனுப்​பி​யிருக்க வேண்​டும்.

ஆனால் தற்​போது தமிழக அரசு தற்​காலிக பொறுப்பு டிஜிபி​யாக வெங்​கட​ராமனை நியமித்​துள்​ளது. இவ்​வாறு தற்​காலிக டிஜிபியை நியமிக்​கக்​கூ​டாது என ஏற்​கெனவே பிர​காஷ் சிங் வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. அந்த உத்​தரவை தமிழக அரசு மதித்து நடக்​க​வில்லை என்​ப​தால், தமிழகத்​தில் தற்​காலிக டிஜிபியை நியமித்​துள்ள தமிழக அரசின் தலைமை செயலருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு சட்​டத்​தில் நடவடிக்கை எடுக்க வேண்​டும் எனக்​கோரி​யிருந்​தார்.

இந்த அவம​தி்ப்பு வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், தமிழகத்​தில் தற்​காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்​தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்​பினர். அதற்கு தமிழக அரசு தரப்​பி்ல், யுபிஎஸ்​சி-க்கு பரிந்​துரை செய்​யப்​படும் பட்​டியலில் தனது பெயரை​யும் சேர்க்க வேண்​டும் எனக்​கோரி மூத்த ஐபிஎஸ் அதி​காரி ஒரு​வர் மத்​திய நிர்​வாக தீர்ப்​பா​யத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அந்த வழக்கை தீர்ப்​பா​யம் கடந்த ஏப்​.30 அன்​று​தான் தள்​ளு​படி செய்​தது. அதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்​முறை​யீட்டு வழக்கை உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆக.22-ம் தேதி​தான் தள்​ளு​படி செய்​தது. ஆகவே தான் தற்​காலிக பொறுப்பு டிஜிபியை நியமிக்க வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டது என விளக்​கமளிக்​கப்​பட்​டது.

அதையேற்ற நீதிப​தி​கள், நிரந்தர டிஜிபியை தேர்வு செய்​யும் வகை​யில் தமிழக அரசு அனுப்​பி​யுள்ள பரிந்​துரைப் பட்​டியலை யுபிஎஸ்சி விரை​வாக பரிசீலித்து தகுந்த உத்​தரவை பிறப்​பி்க்க வேண்​டும். அதன்​படி தமிழக அரசு நிரந்தர டிஜிபியை விரை​வாக தமிழகத்​தில் நியமிக்க வேண்​டும் என தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டு அவம​திப்​பு வழக்​கை முடித்து வைத்தனர்.



By admin