• Mon. Nov 3rd, 2025

24×7 Live News

Apdin News

தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை | CBI officer questioned Velusamypuram merchants for incident of 41 people dying at tvk meeting

Byadmin

Nov 3, 2025


கரூர்: கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, அப்​பகு​தி​யைச் சேர்ந்த 10-க்​கும் மேற்பட்ட வர்த்​தகர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. அக். 30-ம் தேதி முதல் நேற்று முன்​தினம் வரை சம்​பவம் நடை​பெற்ற வேலு​சாமிபுரத்​தில் சிபிஐ அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது, 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் சாலையை அளவீடு செய்​யும் பணியை மேற்​கொண்​டனர். தொடர்ந்​து, அப்​பகுதி நேரடி சாட்​சிகளிட​மும் விசா​ரணை நடத்​தினர்.

இந்​நிலை​யில், வேலு​சாமிபுரத்​தைச் சேர்ந்த வர்த்​தகர்​கள், உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​கள், காயமடைந்​தவர்​கள் என 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு விசா​ரணைக்கு ஆஜராகக் கூறி, சிபிஐ சம்​மன் அனுப்​பி​யிருந்​தது.

இதையடுத்​து, கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் வேலு​சாமிபுரத்​தைச் சேர்ந்த செல்​போன் கடை உரிமை​யாளர், டெய்​லர், மெக்​கானிக் உள்​ளிட்ட 10-க்​கும் மேற்​பட்​டோர் சிபிஐ அதி​காரி​கள் முன்பு நேற்று ஆஜராகினர். அவர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். தொடர்ந்​து, உயி​ரிழந்​தவர்​கள், காயமடைந்​தவர்​களின் குடும்​பத்​தினர்​களிடம் நேரில் சென்று சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

தேடி வந்த அதி​காரி​கள்… இதற்​கிடையே, கரூர் காம​ராஜபுரத்​துக்கு காரில் வந்த சிபிஐ அதி​காரி​கள் 3 பேர், ராம்​கு​மார் என்​பவர் குறித்து அப்​பகு​தி​யில் விசா​ரித்​தனர். அவர், ஆதவ் அர்​ஜு​னா​வின் ‘வாய்ஸ் ஆப் காமன்’ அமைப்​பில் பணி​யாற்றி வரு​வ​தாக கூறப்​படு​கிறது. அவர்​கள் தேடி வந்த முகவரி​யில் இருந்த வீட்​டின் கதவு பூட்​டி​யிருந்​த​தால், அந்த வீட்டை புகைப்​படம் எடுத்து கொண்டு அங்​கிருந்து புறப்​பட்​டனர்.



By admin