• Fri. Oct 10th, 2025

24×7 Live News

Apdin News

தஷ்வந்த் சென்னை சிறுமி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

Byadmin

Oct 9, 2025


சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் மரண  தண்டனை ரத்து செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்)

சென்னையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பொறியியல் பட்டதாரி தஷ்வந்தின் மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

‘தஷ்வந்தை விடுவிப்பது சமூகத்தில் துயரத்தை ஏற்படுத்தும் என்றாலும் ஊகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க முடியாது’ எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தஷ்வந்தின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது ஏன்?



By admin