• Tue. Sep 23rd, 2025

24×7 Live News

Apdin News

தாதா சாஹேப் பால்கே விருது பெறும் மோகன்லால்: மலையாள திரைத்துறையில் அவர் சாதித்தது என்ன?

Byadmin

Sep 23, 2025


மோகன் லால், மலையாள சினிமா, கேரளா, தாதா சாஹேப் பால்கே விருது

பட மூலாதாரம், Facebook/Mohanlal

பவித்ரம் (மலையாளம் 1994) திரைப்படத்தின் இறுதிக் காட்சி படப்பிடிப்பு. படத்தின் நாயகன் மோகன்லால், அதிர்ச்சியில் மனப்பிறழ்வுக்கு ஆளானவர் போல நடிக்க வேண்டும். ஆனால் அவரால், அந்தக் காட்சிக்கான சரியான நடிப்பு என்ன என்பதை முடிவு செய்ய முடியவில்லை.

அங்குமிங்கும் நடந்தபடி யோசித்துக் கொண்டே இருந்தார். 10 நிமிடங்கள் கழித்து இயக்குநர் ராஜீவ்குமாரிடம் வந்து, பல்லை அழுத்தமாகக் கடித்துக் கொண்டு, வாயை அரைப்பதைப் போல இந்தக் காட்சியில் நடிக்கட்டுமா என்று கேட்டார். அதற்கு இயக்குநரும், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் சரி என்றனர். அந்தக் காட்சி படமாக்கப்பட்டது.

பவித்ரம் திரையரங்குகளில் வெளியானது. மோகன்லாலின் நடிப்பை பார்த்த மனோதத்துவ நிபுணர் ஸ்வராஜ் மணி, ராஜீவ் குமாரை அழைத்தார். கடைசியில் பல்லைக் கடித்துக் கொண்டே மோகன்லால் நடித்த காட்சியைப் பார்க்கும்போதுதான், நீங்கள் எவ்வளவு நன்றாக ஆராய்ச்சி செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது என்றார். அதற்கு ராஜீவ் குமார், அது மோகன்லாலே யோசித்து நடித்தார் என்று சொல்ல அந்த நிபுணர் ஆச்சர்யப்பட்டுப் போனார்.

“மோகன்லால் மிகச் சிறந்த நடிகர் என்பதற்கான உதாரணம் இது. அவர் வாழ்க்கையில் கண்ட அத்தனை விஷயங்களும் அவர் மனதில் பதிந்திருக்கின்றன. ஒரு கதாபாத்திரத்துக்கு தேவையான சரியான நேரத்தில் அவரால் அதை மீண்டும் மனதில் கொண்டு வர முடிகிறது. அவர் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகராக இருப்பதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன்” என்று ஸ்வராஜ் மணி கூறினார்.

By admin