• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

தாத்யா டோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தி- 1857 கான்பூர் புரட்சியில் ஆங்கிலேய படையை வீழ்த்தியது எப்படி?

Byadmin

Feb 19, 2025


தாந்தியா தோபே

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, 1859 ஏப்ரல் 7ஆம் தேதி படவுன் காட்டில் தாந்தியா தோபே கண்விழித்தபோது தான் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்

  • எழுதியவர், ரெஹான் ஃபசல்
  • பதவி, பிபிசி ஹிந்தி

பல சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவர் 1857ல் நடைபெற்ற கிளர்ச்சியின் தலைவரான தாந்தியா தோபே.

“1857 ஆம் ஆண்டின் எல்லா கிளர்ச்சியாளர்களிலும் மிகவும் திறமையான தளபதி தாந்தியா தோபே ஆவார். டோபேயின் உயரம் குறைவு. ஆனால் அவர் வலுவான மற்றும் விரைவாக முடிவெடுக்கும் தளபதியாக இருந்தார்,” என்று ஆண்ட்ரூ வார்ட் தனது ‘கான்பூர் 1857’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

” அடர்ந்த புருவங்களுக்குக் கீழே உள்ள அவரது கண்களைப் பார்த்தாலே அவரது தலைமைத் திறன் தெரியவரும். தனது ஆயிரக்கணக்கான வீரர்களுடன் யமுனை ஆற்றைக் கடந்த அவர் தனது பாதையில் வந்த ஒவ்வொரு பெரிய நகரத்தையும் கைப்பற்றினார்.”

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சிவப்பு தாமரை மற்றும் சப்பாத்தி

தாந்தியா தோபே 1814 ஆம் ஆண்டு அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள யேவ்லா கிராமத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் ராமச்சந்திர ராவ்.

By admin