• Fri. Nov 28th, 2025

24×7 Live News

Apdin News

திட்வா புயல்: கடும் மழையால் இலங்கை முழுக்க ரெட் அலர்ட் – வெள்ள பாதிப்புகளின் நிலவரம் என்ன?

Byadmin

Nov 28, 2025


திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை, ஜனாதிபதி அவசர சந்திப்பு - என்ன நிலவரம்?

பட மூலாதாரம், Sri Lanka Airforce

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)

இலங்கையில் திட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக, நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாதிப்புளுக்கு நடுவில் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தங்களால் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

பட மூலாதாரம், KRISHANTHAN

மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 381 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

By admin