• Mon. Dec 1st, 2025

24×7 Live News

Apdin News

திட்வா புயல் மேலும் வலுவிழக்கிறது – தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? நேரலை

Byadmin

Dec 1, 2025


திட்வா புயல், தமிழ்நாடு, இந்தியா, மழை

பட மூலாதாரம், IMD

படக்குறிப்பு, வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.

திட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 02) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக வடக்கு நோக்கி நகர்ந்த திட்வா புயல் மேலும் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் கணிப்பின்படி, நேற்று (நவம்பர் 30) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த திட்வா புயல், இன்று (டிசம்பர் 1-ஆம் தேதி) நண்பகல் வேளையில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைப்படி “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, புதுச்சேரிக்கு வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 50 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது”.

“இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் மையப் பகுதியானது, வடதமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையிலிருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது வடதமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைக்கும் தெற்கு ஆந்திர கடற்கரைக்கும் இணையாக வடக்கு நோக்கி நகர்ந்து, டிசம்பர் ஒன்றாம் தேதி நண்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். இது தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்தபட்சம் 30 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

By admin