• Thu. Nov 6th, 2025

24×7 Live News

Apdin News

திரிசூல்: அரபிக்கடலில் இந்தியா பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது ஏன்?

Byadmin

Nov 6, 2025


த்ரிசூல்:  அரபிக்கடலில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே  நேரத்தில் ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது ஏன்?

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் இந்திய முப்படைகள் இணைந்து ‘திரிசூல்’ என்ற பெயரில் ஒரு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்தப் போர்ப் பயிற்சி, பாகிஸ்தானை ஒட்டிய மேற்கு எல்லைப் பகுதிகள், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கும் இடையேயான சர் க்ரீக் (Sir Creek) பகுதி முதல் அரபிக்கடல் பகுதி வரையான நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் போர்ப் பயிற்சியை, ‘ஆபரேஷன் சிந்தூர்’க்குப் பிறகு நடந்த மிகப்பெரிய போர்ப் பயிற்சி என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில், பாகிஸ்தானிய கடற்படையும் வட அரபிக்கடலில் நவம்பர் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் கடற்படைப் போர்ப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. இது நவம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும்.

ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் போர்ப் பயிற்சி

பாகிஸ்தானின் ராணுவப் பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானும் அரபிக்கடலில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

“இந்தியா தனது முப்படைகளின் தற்போதைய ராணுவப் பயிற்சிக்காக வான்வெளியை ஒதுக்கிய அதே பகுதியில் துப்பாக்கிச் சூடு பயிற்சி நடத்துவதற்கான எச்சரிக்கையை (naval navigational warning) பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது,” என போர்ப் பயிற்சி மற்றும் ஏவுகணைச் சோதனைகளைக் கண்காணிக்கும் சர்வதேச நிபுணர் டேமியன் சைமன், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

By admin