• Fri. Sep 26th, 2025

24×7 Live News

Apdin News

திருநெல்வேலியில் 1,100 ஏக்கர் வக்ஃப் வாரியத்தின் சொத்தா? – மறுத்த உயர்நீதிமன்றம், அடுத்து என்ன?

Byadmin

Sep 25, 2025


வக்ஃப் வாரியம், வக்ஃப் நில சர்ச்சை, திருநெல்வேலி, பள்ளிவாசல் வக்ஃப் சொத்து

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, கான்மியா பள்ளிவாசல்

திருநெல்வேலியில் உள்ள கான்மியா (Kanmiya) பள்ளிவாசல் நிர்வாகம் 1,100 ஏக்கர் நிலத்தை வக்ஃப் சொத்து என முன்வைத்த கோரிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்துள்ளது.

1712-ஆம் ஆண்டு மதுரை சமஸ்தானத்தை ஆண்ட நாயக்க மன்னர் அளித்த செப்பு பட்டயத்தின் அடிப்படையில், ‘2.34 ஏக்கர் நிலம் மட்டுமே பள்ளிவாசலுக்கு சொந்தம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக, தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது. நெல்லை வக்ஃப் வாரிய நிலத்தில் என்ன பிரச்னை? தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது ஏன்?

திருநெல்வேலி மாவட்டம் கண்டியப்பேரியில் கான்மியா பள்ளிவாசல் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமாக 1,100 ஏக்கர் வக்ஃப் நிலம் உள்ளதாக உரிமை கோரி வழக்கு தொடரப்பட்டது.

By admin