• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

திருநெல்வேலி: நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்

Byadmin

Apr 17, 2025


நாங்குநேரி, சின்னதுரை, நெல்லை ஆணையர்

நெல்லையில் ஏற்கெனவே சாதி தொடர்பான பிரச்னையால் தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை தற்போது மீண்டும் தாக்குதலுக்கு ஆளானார். எனினும் இது சாதி ரீதியான தாக்குதல் இல்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

நெல்லை கொக்கிரக்குளம் பகுதிக்கு தனியே சென்ற சின்னதுரையை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி, மொபைல் போனை பறித்துள்ளனர்.

இதில் காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருநெல்வேலி காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி,”சின்னதுரைக்கு அபாயமான காயங்கள் ஏதும் இல்லை. அவருக்கு கையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்றார்.

மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் சின்னதுரையை வரவழைத்த சில நபர்கள் சின்னதுரையை தாக்கி அவரது செல்போனை பறித்துள்ளதாகவும், கொக்கிரக்குளம் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் ஆணையர் சந்தோஷ் கூறினார்.

By admin