• Sun. Mar 9th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பதி: திருமலை கோவில் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடையா? மத்திய அரசு கூறியது என்ன?

Byadmin

Mar 9, 2025


திருப்பதி, திருமலை, ஏழுமலையான் கோவில், No-fly zone, பிரமோற்சவம், Tirupati Arial view , ராம்மோகன் நாயுடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருப்பதி கோவிலின் மேற்புறத் தோற்றம்

திருப்பதி திருமலையை வானூர்திகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட (No-Fly Zone) பகுதியாக அறிவிக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

‘எந்தப் பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்படும்? மத்திய அரசின் ஒழுங்குமுறைகள் கூறுவது என்ன?’ என்பன போன்ற பல கேள்விகளை இந்தக் கோரிக்கை எழுப்புகிறது.

மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தானம் கடிதம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் பி.ஆர்.நாயுடு, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திருமலை கோவிலுக்கு மேலே விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரான ராம் மோகன் நாயுடுவிடமும் இதே கோரிக்கையை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மார்ச் 1ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியானது. அதில் பிப்ரவரி 17ஆம் தேதி மத்திய அமைச்சருக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

By admin