• Sun. Dec 14th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சாற்றும் பட்டுத்துணியிலும் முறைகேடா? அடுத்தடுத்து அதிர வைக்கும் புகார்கள்

Byadmin

Dec 13, 2025


டிடிடி - பட்டு சால்வை சர்ச்சை

    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி
    • பதவி, பிபிசிக்காக

திருப்பதி திருமலை பிரசாத லட்டில் கலப்பட நெய் மற்றும் பரகாமணி (கோவில் பணத்தை எண்ணும் பணி) மூலம் வெளிநாட்டுப் பணம் திருட்டு ஆகியவற்றைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

திருமலையில் வெங்கடேஸ்வரரின் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் பட்டு சால்வைகளை வாங்கியதில் பல ஆண்டுகளாக ஊழல் நடந்துள்ளதாக விஜிலென்ஸ் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தரமற்ற ஆடைகளை வழங்கிய நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், இந்த விவகாரம் குறித்து ஏசிபி டிஜி (ACB DG) விசாரணை நடத்தவும் திருமலை திருப்பதி தேவஸ்தான (டிடிடி – TTD) அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது.

நடந்தது என்ன?

டிசம்பர் 10 அன்று, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘டிடிடி சால்வைகள் வாங்கியதில் முந்தைய நிர்வாகக் குழு ஊழல் செய்திருப்பதாக’ குற்றம் சாட்டியிருந்தார்.

ரூ.350 மதிப்புள்ள பட்டு சால்வை ரூ.1,350-க்கு வாங்கப்பட்டதாக அவர் கூறினார். “இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 2019 முதல், ஆண்டுதோறும் சுமார் ரூ.80-90 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது” என டிடிடி தலைவர் கூறினார்.

By admin