• Sun. Jun 1st, 2025

24×7 Live News

Apdin News

திருப்பத்தூர்: சாதாரண பல் சிகிச்சையில் 8 பேர் பலியானது எப்படி? லான்செட் ஆய்வில் கிடைத்த உண்மை

Byadmin

May 30, 2025


பல் மருத்துவ சிகிச்சைப் பெற்ற எட்டு பேர் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல் மருத்துவ கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்ற 8 பேர், சுகாதாரமற்ற கருவியைப் பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக லான்செட் மருத்துவ ஆய்விதழில் வெளிவந்துள்ள ஓர் ஆய்வு கூறுகிறது.

சிகிச்சையின்போது தேவைப்படும் சலைன் பாட்டிலை திறக்க சுகாதரமற்ற ஒரு கருவியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வந்ததால், புர்கோல்டெரியா சூடோமலெய் (Burkholderia pseudomallei) எனும் பாக்டீரியா நரம்பு மண்டலத்தை பாதித்து நியூரோமெலியோய்டோசிஸ் (neuromelioidosis) என்ற தீவிர மூளைத் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாட்டிலை திறக்கப் பயன்படுத்தப்பட்ட, பெரியோஸ்டீல் எலிவேட்டர் (periosteal elevator) என்ற அந்தக் கருவி பல் அறுவை சிகிச்சையின்போது, எலும்புகளின் மீதுள்ள மெல்லிய திசுக்களை தூக்கிப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

முறையாகச் சுத்தம் செய்யாத அந்தக் கருவி சலைன் பாட்டிலை திறக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. லேசாக மூடப்பட்ட சலைன் பாட்டிலை தேவைப்படும் போதெல்லாம் திறக்க அந்தக் கருவி அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

By admin