• Sat. Dec 27th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீப சர்ச்சையைத் தொடர்ந்து சந்தனக் கூடு சர்ச்சை – விழாவை நடத்துவதில் என்ன சிக்கல்?

Byadmin

Dec 27, 2025


 திருப்பரங்குன்றம், சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா, சந்தனக் கூடு, மதுரை
படக்குறிப்பு, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா

ஆடு, கோழி பலியிடத் தடை, கார்த்திகை தீப விவகாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு விழாவை நடத்துவதற்கு தடைகோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கில், பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு தர்கா நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை தற்போதைய நிலையே (Status quo) தொடர உத்தரவிடுமாறு மனுதாரர் முன்வைத்த கோரிக்கையை நீதிபதி எம்.ஜோதிராமன் நிராகரித்துவிட்டார்.

“மலையில் கொடி ஏற்றக் கூடாது, சந்தனக் கூடு நடத்தக்கூடாது என இந்து அமைப்பினர் தொடர்ந்து இடையூறு செய்கின்றனர்” என தர்கா நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், நீதிமன்ற உத்தரவை தர்கா நிர்வாகிகள் மீறுவதாக இந்து அமைப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். சந்தனக் கூடு விழாவை நடத்துவதில் என்ன சிக்கல்?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் வரும் ஜனவரி 6 ஆம் தேதியன்று சந்தனக் கூடு விழா நடக்க உள்ளது.

இதற்கான கொடியேற்றம் டிசம்பர் 21 ஆம் தேதி நடந்துள்ளது. விழா குறித்து தர்கா நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அழைப்பிதழில், ‘கந்தூரி மகா உற்சவம் சந்தனக் கூடு விழாவில் முஸ்லிம்கள், இந்துக்கள், பிற மதத்தவர் தங்கள் குடும்ப சகிதம் பங்கு பெற வரலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin