• Thu. Jan 8th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் தூண்: நீதிபதிகள் குறிப்பிட்ட 5 விஷயங்கள் என்ன?

Byadmin

Jan 6, 2026


'நீதிபதிகள் குறிப்பிட்ட 5 விஷயங்கள்' - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அடுத்தது என்ன? கேள்விகளும் பதில்களும்

‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்’ என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ஜனவரி 6 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.

முன்னதாக, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, தர்கா நிர்வாகம் உள்பட பல்வேறு தரப்பினர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்து அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில், தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இங்குள்ள பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்தநிலையில், ‘மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் முன்வைத்தன. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

By admin