• Fri. Feb 7th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம்: மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?

Byadmin

Feb 7, 2025


1931இல் வெளியான லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பு கூறியது என்ன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பில் திருப்பரங்குன்றம் கோவிலும், மலையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

திருப்பரங்குன்றம், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டுச் செய்திகளில் தவறாமல் இடம்பெறும் பகுதி.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மலையின் ஒருபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள கோவில் மற்றும் தர்கா தொடர்பான விவகாரம் சர்ச்சையாக மாறுவது இது முதல்முறை அல்ல. நூறாண்டுகளுக்கு மேலாக இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்துள்ளன, தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்புகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, 1931ஆம் ஆண்டில் லண்டனின் பிரிவி கவுன்சில் அளித்த தீர்ப்புதான்.

By admin