• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

திருப்பூர்: ஆடு, மாடுகளை குறிவைத்து கடிக்கும் தெருநாய்கள் – அரசிடம்

Byadmin

Mar 1, 2026


ஆடு, மாடுகளை குறிவைக்கும் தெருநாய்கள் – இழப்பீடும் குறைப்பு என கொந்தளிக்கும் விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் தெருநாய்களால் கொல்லப்படும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அரசின் தரவுகள் காட்டுகின்றன.

இதற்கு அரசு தரும் நிவாரணத்தை சந்தை மதிப்புக்கேற்ப அதிகரிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிவரும் நிலையில், புதிதாக வெளியாகியுள்ள அரசாணையில், குட்டி, கன்று மற்றும் குஞ்சுகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த நிவாரணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், இழப்பீட்டையும் குறைத்திருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, மாநிலத்திலேயே திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் சாமிநாதனிடம் இதுபற்றி கருத்து கேட்க முயன்றபோது அவரிடம் பதில் பெற முடியவில்லை.

தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், கால்நடைகளுக்கு காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

By admin