• Thu. Feb 5th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பூர்: பட்டியல் பிரிவு இளைஞரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்ததாக புகார் – என்ன நடந்தது?

Byadmin

Feb 4, 2026


நிலத்தகராறில் பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி, சிறுநீர் குடிக்க வைத்ததாக புகார்
படக்குறிப்பு, இடிக்கப்பட்ட வீடு

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உங்களுக்கு சங்கடம் தரும் விவரிப்புகள் இருக்கக் கூடும்.

திருப்பூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கு இடையிலான நிலப் பிரச்னையில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த இளைஞரை ஒரு கும்பல் அடித்துத் துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் அறிந்து ஊர் மக்கள் திரண்டதும் தப்பியோடியதில் கல்லுாரி மாணவர் ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

பட்டியல் பிரிவு இளைஞர் சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரை உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் நமசிவாயம் மறுத்துள்ளார். பிபிசியிடம் பேசிய அவர், இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

பிரச்னைக்குக் காரணமான அந்த நிலம் பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிலமில்லை என்றும், யாருடைய நிலம் என்பது குறித்து வழக்கு நடந்து வருவதால் நீதிமன்றமே அதை முடிவு செய்யும் என்றும் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் கூறினார்.

காவல்துறை, வருவாய்த் துறை கூறுவது என்ன?

கொமரலிங்கம் காவல்துறையினர் மற்றும் உடுமலை வருவாய்த் துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, “திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள ருத்ராபாளையம் கிராமத்தில் 13 ஏக்கர் 67 சென்ட் இடத்தை குத்தகைக்கு வாங்கியுள்ள ஜல்லிப்பட்டி முருகன், கோபிநாத் ஆகியோர், கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

By admin