• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

திருவண்ணாமலை: ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை, போலீஸார் டிஸ்மிஸ் – நடந்தது என்ன?

Byadmin

Oct 3, 2025


திருவண்ணாமலை, பாலியல் வன்கொடுமை, பெண்கள், குற்றம், காவல்துறை
படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீஸார் சுரேஷ்ராஜ், சுந்தர்

திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இரண்டு காவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுள்ளனர்

இரவு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளர் சதிஷ் குமார் பிபிசி தமிழிடம் பகிர்ந்துக்கொண்ட தகவல் இங்கே.

”ஆந்திர மாநிலத்திலிருந்து வாழை தார் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று செப்டெம்பர் 29 திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. வாகனத்தின் ஓட்டுனர் தனது அக்கா மற்றும் அக்காவின் மகளான 19 வயதுடைய இளம்பெண் ஆகிய இருவரையும் கோயிலுக்கு செல்வதற்காக உடன் அழைத்து வந்துள்ளார்.

By admin