• Wed. Dec 24th, 2025

24×7 Live News

Apdin News

திருவண்ணாமலை: திமுக மாநாட்டுக்கு ஏரி மண் எடுப்பதை எதிர்த்த விவசாயிகள் மீது கைது நடவடிக்கையா?

Byadmin

Dec 24, 2025


தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டதாகக் கூறி 22 விவசாயிகளை டிசம்பர் 14 ஆம் தேதியன்று போளூர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

பட மூலாதாரம், X/Udhaystalin

படக்குறிப்பு, மாநாட்டில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டதாகக் கூறி 22 விவசாயிகளை டிசம்பர் 14ஆம் தேதியன்று போளூர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனால், “அதே நாளில் தி.மு.க மண்டல மாநாடு நடந்தது. அதற்காக ஏரி மண்ணை அனுமதியின்றி எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதற்காக எங்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்” என்கிறார், உழவர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் அருள் ஆறுமுகம்.

இதன் பின்னணியில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். “ஆனால், எனக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என பிபிசி தமிழிடம் எ.வே.கம்பன் தெரிவித்தார்.

மாநாட்டுக்கு ஏரி மண் எடுக்கப்பட்டதா?

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்டு மலப்பாம்பாடி கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் டிசம்பர் 14ஆம் தேதி தி.மு.க இளைஞரணியின் வடக்கு மண்டல மாநாடு நடந்தது.

அந்த மாநாட்டில் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

By admin