• Tue. Sep 2nd, 2025

24×7 Live News

Apdin News

தீவிரமடையும் சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதம்: என்ன சொன்னார் ராகுல் காந்தி?

Byadmin

Sep 2, 2025


உண்ணாவிரதப் போராட்டத்தில் சசிகாந்த் செந்தில்

பட மூலாதாரம், @s_kanth

படக்குறிப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தில் சசிகாந்த் செந்தில்

இந்திய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய பள்ளிக் கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டுமெனக் கோரி, சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவரும் காங்கிரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். அவருடைய உடல்நிலை மோசமானதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்க்ஷா அபியான் (SSA) நிதியான 2,152 கோடி ரூபாயை சில காரணங்களைக் கூறி நிறுத்திவைத்திருக்கிறது. அதனைக் கண்டித்தும், அந்த நிதியை விடுவிக்கக்கோரியும் திருவள்ளூர் தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சசிகாந்த் செந்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினார்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகாந்த் செந்தில்.

பட மூலாதாரம், @s_kanth

படக்குறிப்பு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகாந்த் செந்தில்.

உடல்நலம் பாதிப்பிற்கு உள்ளான நிலையில் அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையிலும் அவர் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமையன்று அவரது ரத்த அழுத்தம் கடுமையாக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளானது. இதையடுத்து, திருவள்ளூரிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இங்கிருந்தும் உண்ணாவிரதத்தைத் தொடரப்போவதாகத் தெரிவித்த அவர், “சித்தாந்த வேறுபாடுகளை வைத்து அரசியல் செய்யாமல் மாநிலத்திற்கு வர வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோதியிடமும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடமும் தமிழக மக்கள் கோர வேண்டும்” என்றார்.

By admin