• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

துபையில் பற்றி எரிந்த 5 நட்சத்திர ஓட்டல் – மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

Byadmin

Mar 1, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், துபை, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், UGC

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய “பெரிய ” மற்றும் தொடர்ச்சியான தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் இரான் பதில் தாக்குதலில் நடத்தியது. துபையில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டல் தாக்குதலுக்கு இலக்கானது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப்பெரிய நகரமான துபையில் உள்ள ஃபேர்மாண்ட் தி பாம் ஹோட்டலில் சனிக்கிழமை தீப்பிடித்து எரிவதை பிபிசி உறுதிப்படுத்திய வீடியோ காட்டுகிறது. அடர்ந்த கரும்புகை வானத்தை நோக்கி எழுகிறது.

பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் தீப்பற்றியதில் நான்கு பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலதிக விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், உலகின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றான துபை சர்வதேச விமான நிலையத்தில் நடந்த “சம்பவத்தில்” நான்கு பேர் காயமடைந்ததாக துபை ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. விமான நிலைய முனையத்தில் “சிறிய அளவில் சேதம்” ஏற்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பிராந்தியத்தின் பிற பகுதிகளில் அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள கத்தார், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்கள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்ததாகக் கூறியுள்ளன.

By admin