• Mon. Jun 23rd, 2025

24×7 Live News

Apdin News

துபை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது உங்களுக்கு தெரியுமா? மறக்கப்பட்ட வரலாறு

Byadmin

Jun 23, 2025


துபை, குவைத், பஹ்ரைன், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Corbis via Getty Images

படக்குறிப்பு, 1900ஆம் ஆண்டில் துபை

1956ஆம் ஆண்டு குளிர்காலத்தில், தி டைம்ஸ் நிருபர் டேவிட் ஹோல்டன் பஹ்ரைன் தீவிற்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில், பிரிட்டிஷ் அரசின் கீழ் பஹ்ரைன் தீவு இருந்தது.

புவியியல் ஆசிரியராக சில காலம் பணிபுரிந்த டேவிட் ஹோல்டன், அரேபியாவில் பணியமர்த்தப்படுவதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா மகாராணி நியமிக்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தர்பாரில் கலந்து கொள்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

துபை, அபுதாபி மற்றும் ஓமன் என வளைகுடா நாடுகளில் அவர் சென்ற இடமெல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவின் எச்சங்களை அவரால் காண முடிந்தது.

“பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் இங்கே சற்று கற்பனையான ஒரு போக்கையே பராமரிக்கிறது,” என்று ஹோல்டன் எழுதினார், “முரண்பாடுகள் மற்றும் காலத்திற்கு ஒவ்வாத தன்மை நிறைந்த சூழ்நிலை நிலவியது… அங்கிருந்தவர்கள் வேலைக்காரர்களாக, பாரம் சுமப்பவர்களாக, சலவை செய்யும் சலவைத் தொழிலாளியாக, காவலாளியாக இருந்தனர்,” என்றும், “ஞாயிற்றுக்கிழமைகளில் விருந்தினர்களுக்கு பண்டைய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆங்கிலோ-இந்திய சடங்கான கறி உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது” என்றும் அவர் எழுதினார்.

By admin