• Fri. May 30th, 2025

24×7 Live News

Apdin News

துமிந்தவுக்கு விளக்கமறியல் ஜூன் 5 வரை நீடிப்பு!

Byadmin

May 29, 2025


முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துமிந்த திஸாநாயக்க, சுகயீனம் காரணமாகக் கடந்த 25ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (27) மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், துமிந்த திஸாநாயக்க இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post துமிந்தவுக்கு விளக்கமறியல் ஜூன் 5 வரை நீடிப்பு! appeared first on Vanakkam London.

By admin