• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

துருக்கியில் அதிபருக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவது ஏன்? முழு விளக்கம்

Byadmin

Mar 25, 2025


மார்ச் 23 அன்று, ஊழல் மற்றும் ஒரு பயங்கரவாதக் குழுவுக்கு உதவியதாக இமாமோக்லு அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இமாமோக்லுவின் கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவே தெருக்களில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருதுகிறார்கள்

துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லின் மேயர் மற்றும் முக்கிய அதிபர் போட்டியாளரான எக்ரெம் இமாமோக்லு மீதான கைது நடவடிக்கைக்குப் பெரியளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதோடு துருக்கியில் ஜனநாயகத்தின் நிலை குறித்து உலகளாவிய கவலைகளும் எழுந்துள்ளன.

இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? இங்கு விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

துருக்கியில் போராட்டம் நடப்பது ஏன்?

எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் (CHP) முக்கியமான தலைவர் மற்றும் இஸ்தான்புலின் மேயராக உள்ள இமாமோக்லு நீண்ட காலமாக அதிபர் ரெசெப் தையிப் எர்துவானின் மிகவும் வலிமையான போட்டியாளராகக் காணப்பட்டுள்ளார்.

மார்ச் 23 அன்று, ஊழல் மற்றும் ஒரு பயங்கரவாதக் குழுவுக்கு உதவியதாக இமாமோக்லு அதிகாரபூர்வமாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

By admin