• Mon. Oct 6th, 2025

24×7 Live News

Apdin News

துருவிஷ்ணு: கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 2 வயது குழந்தைக்கு என்ன நேர்ந்தது?

Byadmin

Sep 29, 2025


கரூர் பரப்புரை, விஜய் பரப்புரை, கரூர் கூட்ட நெரிசல்
படக்குறிப்பு, கரூர் கூட்ட நெரிசலில் பலியான 2 வயது குழந்தை துருவிஷ்ணு

”கூட்டநெரிசலில் நமக்கு என்னவானாலும் பரவாயில்லை. குழந்தை பிழைத்தால் போதும் என்று நான்தான் இருட்டில் யாரோ ஒரு பெண்ணிடம் அவனைக் கொடுத்தேன். அவர் யாரென்றே தெரியாது. ஆனால் அந்தப் பெண்ணை அதன்பின் பார்க்கவே முடியவில்லை. குழந்தையும் பிணமாகத்தான் கிடைத்தான். நான்தான் அவனைத் துாக்கிக் கொண்டு போய் கொன்று விட்டேன்!”

இப்படிச் சொல்லிவிட்டு, கதறிக்கதறி அழுகிறார் லல்லி. தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்த 2 வயது குழந்தை துருவிஷ்ணுவின் அத்தை அவர்.

அசம்பாவித சம்பவம் நடந்த பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள வடிவேல் நகரில்தான் இந்த குழந்தையின் வீடும் அமைந்துள்ளது.

துருவிஷ்ணுவின் தந்தை விமல், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தாயார் மாதேஸ்வரி, காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். அவர்களின் 2 வயது குழந்தையான துருவிஷ்ணுவை, விஜய் பரப்புரை நிகழ்ச்சிக்கு விமலின் சகோதரியான லல்லி என்பவர்தான் துாக்கிச் சென்றுள்ளார். அந்த வடிவேல் நகர் வீதிக்கு அருகில் சாலையிலுள்ள கடையில் நின்றுள்ளார்.

By admin