• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

துரை வைகோ vs மல்லை சத்யா : கட்சி நிர்வாகிகள் கூறுவது என்ன ? மதிமுக மோதல் பின்னணி விவரம்

Byadmin

Apr 20, 2025


மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய துரை வைகோ, வைகோ, திருச்சி எம்.பி.

பட மூலாதாரம், @duraivaikooffl/x

படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு உடல் நலம் குன்றவே கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த துரை வைகோ தமிழ்நாடு திரும்பினார்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க) முதன்மைச் செயலாளராக செயல்பட்டு வந்த, துரை வைகோ கட்சிப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 19 அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள இயலாமல் கட்சிக்கும் தலைமைக்கும் தீராப் பழியை சுமத்தும் ஒருவர் மத்தியில் பணியாற்றிட இயலாது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் துரை வைகோ கூறியது என்ன?

2018-ஆம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு உடல் நலம் குன்றவே கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த துரை வைகோ தமிழ்நாடு திரும்பினார்.

தந்தையின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொருட்டு, அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டதாக தன்னுடைய அறிக்கையில் துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.

By admin