• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

துல்சி: இந்தியாவின் இந்த சிறு கிராமத்தில் மொத்தமுள்ள 4,000 பேரில் 1,000 பேர் யூடியூபர்களானது எப்படி?

Byadmin

Feb 23, 2025


துல்சி யூடியூப் கிராமம், சத்தீஸ்கர்,

பட மூலாதாரம், Estudio Santa Rita

மத்திய இந்தியாவில் உள்ள துல்சி கிராமத்தில், சமூக ஊடகங்கள் ஒரு பொருளாதார சமூக புரட்சிக்கு வித்திட்டுள்ளன. இந்த உலகின் மீது யூடியூப் ஏற்படுத்திய தாக்கத்தின் ஒரு சிறிய மாதிரிதான் இந்த கிராமம்.

மத்திய இந்தியாவில் ராய்ப்பூருக்கு அருகே உள்ள துல்சி கிராமத்தில், செப்டம்பரில் ஒரு புழுக்கமான காலைப்பொழுதில் கிராமவாசிகள் வயல்களுக்கு செல்லும் நேரம், 32 வயதான யூடியூபர் ஜெய் வர்மா தனது புதிய வீடியோவில் பங்கேற்க சில பெண்களை அழைக்கிறார். அந்தப் பெண்கள் தங்களது சேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு, ஒன்றிரண்டு வார்த்தைகளை பகிர்ந்துகொண்டு அவரை சூழ்கின்றனர்.

வயதான பெண் ஒருவரை ஒரு பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்த வர்மா, மற்றொரு பெண்ணை அந்த மூதாட்டியின் காலை தொட்டு வணங்கும் படியும், மூன்றாவது ஒரு பெண்ணை தண்ணீர் வழங்கவும் சொல்லி, ஒரு கிராமப்புற திருவிழா காட்சியை படம்பிடிக்கிறார்.

பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள நகரங்கள் மற்றும் நாடுகளில் உள்ள ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் இந்த காட்சி படம்பிடிக்கப்படுகிறது.

By admin