• Wed. Jan 14th, 2026

24×7 Live News

Apdin News

தூய்மைப் பணியாளர்களின் 165 நாள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த 2 விஷயங்கள்

Byadmin

Jan 14, 2026


சென்னை, தூய்மைப் பணியாளர்கள், போராட்டம், தனியார்மயம்

பட மூலாதாரம், Getty Images

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 165 நாட்களாக போராட்டம் நடத்திவந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு நடத்திய பேச்சு வார்த்தையையடுத்து அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

அவர்களது எந்தெந்தக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றன? போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி?

சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 5 மற்றும் 6-இல் (ராயபுரம், திரு.வி.க. நகர்) தூய்மைப் பணிகளை முழுமையாகத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 1,900க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

சென்னை, தூய்மைப் பணியாளர்கள், போராட்டம், தனியார்மயம்

பட மூலாதாரம், UUI

படக்குறிப்பு, ரிப்பன் மாளிகைக்கு முன்பாக போராட்டம் நடத்தியபோது பேச்சு வார்த்தை நடத்தப்பட்டாலும் அதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ‘ரிப்பன் மாளிகை’ முன்பாக போராட்டம் துவங்கியது.

By admin