• Sun. Dec 21st, 2025

24×7 Live News

Apdin News

தென்கொரியா: தேசிய காப்பீடு திட்டத்தில் தலைமுடி சிகிச்சையை சேர்க்க விரும்பும் அதிபர்

Byadmin

Dec 21, 2025


முடி உதிர்தல் சிகிச்சைகளுக்கான செலவை தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் ஏற்க வேண்டும் என்று அதிபர்  லீ ஜே-மியுங் பரிந்துரைக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முடி உதிர்தல் சிகிச்சைகளுக்கு தேசிய சுகாதார காப்பீடு காப்பீடு அளிக்க வேண்டும் என்று அதிபர் லீ பரிந்துரைத்தார்.

தென்கொரியாவின் நேர்த்தியான சிகையலங்காரம் கொண்ட அதிபர் லீ ஜே-மியுங், அந்நாட்டின் வழுக்கைப் பிரச்னை உள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

முடி உதிர்தல் சிகிச்சைகளுக்கான செலவை தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் ஏற்க வேண்டும் என்று அதிபர் லீ பரிந்துரைக்கிறார்.

முடி உதிர்தலுக்கான மருத்துவ சிகிச்சைகள் முன்பு “அழகு சார்ந்ததாக” (cosmetic) கருதப்பட்டன, ஆனால் தற்போது அவை “வாழ்வாதாரம் சார்ந்த விஷயமாகப்” பார்க்கப்படுகின்றன என்று அதிபர் லீ ஜே-மியுங் இந்த வார ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.

தற்போது தென்கொரியாவின் தேசிய சுகாதாரக் காப்பீடு, சில மருத்துவக் காரணங்களால் ஏற்படும் முடி உதிர்தல் சிகிச்சைகளுக்கு மட்டுமே நிதி வழங்குகிறது. ஆனால், பரம்பரை ரீதியான முடி உதிர்தல் ஒருவரின் உயிருக்கோ அல்லது ஆரோக்கியத்திற்கோ அச்சுறுத்தலாக இல்லாததால், அது இக்காப்பீட்டில் சேர்க்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ஜியோங் உன்-கியோங் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் விளக்கினார்.

அதற்குப் பதிலளித்த லீ, “பரம்பரை ரீதியாக வரும் நோயை ஒரு நோயாக வரையறுப்பதா, இல்லையா என்பது மட்டும்தானா இங்கே கேள்வி?” என்று கேட்டார்.

By admin