• Thu. Nov 27th, 2025

24×7 Live News

Apdin News

தென்மேற்கு வங்கக் கடலில் உருவானது திட்வா புயல் – தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

Byadmin

Nov 27, 2025


வானிலை, கனமழை

பட மூலாதாரம், Getty Images

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு திட்வா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

அதேபோல், பாம்பன், தூத்துக்குடி ஆகிய இரண்டு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவ. 27) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அருகிலுள்ள இலங்கை கடற்கரையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, அதிகாலை 5.30 மணி அளவில் இலங்கையின் ஹம்பாந்தோட்டையிலிருந்து கிழக்கு-வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும், இலங்கையின் மட்டக்களப்பிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 190 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin