• Sat. Nov 8th, 2025

24×7 Live News

Apdin News

தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவு – எவ்வாறு அமல்படுத்தப்படும்?

Byadmin

Nov 8, 2025


அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் தெருநாய்களை அகற்றுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நவம்பர் 7ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது.

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

அகற்றப்பட்ட பிறகு, அவற்றுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்பகங்களில் வைக்க வேண்டும்.

மேலும், நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகள், கால்நடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

By admin