• Wed. Aug 13th, 2025

24×7 Live News

Apdin News

தெருநாய்கள் யாரையெல்லாம் குறிவைக்கின்றன? தெருநாய் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்? 8 கேள்வி-பதில்கள்

Byadmin

Aug 13, 2025


தெருநாய் பிரச்னை, நாய்க்கடி, நாய் மனித மோதல்

பட மூலாதாரம், Getty Images

டெல்லியில் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து தெரு நாய்கள் தொடர்பான பிரச்னையை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பின்படி 1.8 லட்சம் தெருநாய்கள் உள்ளன. இவற்றில் 27% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் பல நகரங்களில் நாய்களின் எண்ணிக்கை தொடர்பான தெளிவாக புள்ளிவிவரங்கள் இல்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒருபக்கம் நாய்களுக்கு தடுப்பூசி வழங்குவது, கருத்தடை செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெரு நாய்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்கிறார் ஓய்வுபெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைவேல்.

By admin