• Mon. Jun 30th, 2025

24×7 Live News

Apdin News

தெலங்கானா: ஹைதராபாத் அருகே தொழிற்சாலையில் மிகப்பெரிய உலை வெடிப்பு

Byadmin

Jun 30, 2025


பாசமிலரம் தொழிற்பேட்டையில் உலை வெடித்தது.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, பாசமிலரம் தொழிற்பேட்டையில் உலை வெடித்தது.

தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பாசமிலரம் தொழிற்பேட்டையில் ஒரு உலை வெடித்ததைத் தொடர்ந்து அங்குப் பெரிய அளவிலான தீ ஏற்பட்டது.

அங்குள்ள சிகாச்சி கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று மாநில சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்ஹா தெரிவித்தார்.

இந்த வெடிப்பு பெரும் தீயை ஏற்படுத்தியது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

வெடிப்பின் சக்தியால் அங்கிருந்த தொழிலாளர்கள் வெகுதூரம் தூக்கி வீசப்பட்டதாக சில தொழிலாளர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, வெடிப்பின் சக்தியால் அங்கிருந்த தொழிலாளர்கள் வெகுதூரம் தூக்கி வீசப்பட்டதாக சில தொழிலாளர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

இடிந்து விழுந்த கட்டடம்

வெடிப்பின் தீவிரத்தால் அங்கிருந்த தொழிலாளர்கள் வெகுதூரம் தூக்கி வீசப்பட்டதாக சில தொழிலாளர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

By admin