• Sun. Jun 1st, 2025

24×7 Live News

Apdin News

தேசிய கராத்தே அணி தெரிவு – 2025

Byadmin

May 30, 2025


தேசிய கராத்தே அணி வயது 16/17 பிரிவினருக்கான  தெரிவுப்போட்டிகள் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் குமித்தே பிரிவில் மூன்றாம் இடத்தினை பெற்று யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ஜே. ஆர். பியன்பெனோ, யாழ். புனித பரியோவான் கல்லூரி மாணவன் ஜே. தமிழ்செல்வன் மற்றும் யாழ்  மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி‌ ஜே.ஆர்.பி. ஆன் திவிஷனா ஆகியோர் தேசிய கராத்தே  அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சிகளை சென்செய் எஸ். ரஞ்சித் வழங்கியிருந்தார்.

வடமாகாணத்தில் இருந்து முதல் தடவையாக தேசிய அணியின் தெரிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin