• Fri. Aug 15th, 2025

24×7 Live News

Apdin News

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை | G K Vasan says that some more parties will join the NDA

Byadmin

Aug 15, 2025


மதுரை: தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு இன்​னும் சில கட்​சிகள் வரும். இன்​னும் சில மாதங்​களில் முழு வடிவம் பெற்​று, அதிகாரப்பூர்வ அறி​விப்பு வெளி​யாகும் என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் கூறி​னார். தமிழ் மாநில காங்​கிரஸ் கட்​சி​யின் தென்​மண்டல இளைஞரணி நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்டம் மதுரை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற ஜி.கே.வாசன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அதி​முக, பாஜக கூட்​டணி வெற்​றிக் கூட்​ட​ணி. தமிழகத்​தில் ஆட்சி மாற்​றத்தை மக்​கள் விரும்​பு​கின்​றனர். அதே​போல, ஆட்சி மாற்​றத்தை ஏற்​படுத்த விரும்​பும் கட்​சிகள் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இணைந்து செயல்​படலாம். சென்​னை​யில் 13 நாட்​களாகப் போராடிய தூய்​மைப் பணி​யாளர்​களை, மனி​தாபி​மானமற்ற முறை​யில் கைது செய்​தது கண்​டிக்​கத்​தக்​கது.

தென் மாநிலங்​களில் அதிக அளவு சட்​டம்​-ஒழுங்கு பாதிக்​கப்​பட்ட மாநில​மாக தமிழகம் திகழ்​கிறது. ஆட்​சி, அதி​காரம், பண பலத்தை வைத்து தேர்​தலில் வெற்றி பெற்​று​விடலாம் என்று திமுக கருதுகிறது. ஆனால், வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக​வுக்கு மக்​கள் பாடம் கற்​பிப்​பார்​கள். பிஹாரில் படு​தோல்வி அடை​யும் என்​ப​தால், தேர்​தல் ஆணை​யம் மீது பொய்​யான குற்​றச்​சாட்​டு​களை காங்​கிரஸ் கட்சி முன்​வைத்​துள்​ளது. தேசிய ஜனநாயகக் கூட்ட​ணிக்கு இன்​னும் சில கட்​சிகள் வரும். சில மாதங்​களில் முழு வடிவம் பெற்​று, இதுகுறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பு வெளி​யாகும். இவ்​வாறு ஜி.கே.​வாசன் கூறி​னார்​.



By admin