• Sat. Apr 11th, 2026

24×7 Live News

Apdin News

தேனிசைத்தென்றல்’ தேவா வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Byadmin

Apr 11, 2026


‘விஸ்வாசம்’, ‘காலா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகை சாக்ஷி அகர்வால் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளரும், பின்னணிப்பாடகருமான ‘தேனிசைத் தென்றல் ‘ தேவா வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தீயோர் கூடம் ‘ திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால் , டேனியல் ஆனி போப், ஜாவா சுந்தரேசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வசந்த் இசை பேட்டை இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜகன் நாராயணன் -சக்திவேல்- வீரமணி – எம். கண்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதாபாத்திரங்களின் தோற்றமும், அவர்கள் சிதறிய கண்ணாடி துண்டுகளில் தெரிவதும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே ‘ஒவ்வொரு குற்றமும் ஒரு தடத்தை விட்டுச் செல்கிறது. ஆனால் சில உண்மைகள் புதைந்து கிடக்க மறுக்கின்றன’ என்பதை இப்படத்தின் திரைக்கதை மூலம் ரசிகர்களுக்கு புது வகையினதான திரை அனுபவத்தை வழங்குகிறோம் என படக் குழுவினர் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ விஸ்வாசம்’, ‘காலா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகை சாக்ஷி அகர்வால் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளரும், பின்னணிப்பாடகருமான ‘தேனிசைத் தென்றல் ‘ தேவா வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தீயோர் கூடம் ‘ திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால் , டேனியல் ஆனி போப், ஜாவா சுந்தரேசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வசந்த் இசை பேட்டை இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜகன் நாராயணன் -சக்திவேல்- வீரமணி – எம். கண்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதாபாத்திரங்களின் தோற்றமும், அவர்கள் சிதறிய கண்ணாடி துண்டுகளில் தெரிவதும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே ‘ஒவ்வொரு குற்றமும் ஒரு தடத்தை விட்டுச் செல்கிறது. ஆனால் சில உண்மைகள் புதைந்து கிடக்க மறுக்கின்றன’ என்பதை இப்படத்தின் திரைக்கதை மூலம் ரசிகர்களுக்கு புது வகையினதான திரை அனுபவத்தை வழங்குகிறோம் என படக் குழுவினர் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin