• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

‘தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது பாஜக’ – முதல்வர் ஸ்டாலின் சாடல் | BJP has turned the Election Commission into its poll rigging machinery: MK Stalin

Byadmin

Aug 11, 2025


சென்னை: “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரின் மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்றது ஏதோ நிர்வாகக் குளறுபடி அல்ல, மக்கள் அளித்த தீர்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.

எனது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு ஆதாரங்கள் எந்த அளவுக்கு இந்த முறைகேடு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இன்று, ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவுள்ள நிலையில், பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.

கணினியால் படித்தறியக் கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்பும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்;

அரசியல் நோக்கத்தோடு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது நிறுத்தப்பட வேண்டும்; மற்றும்,நமது மக்களாட்சியை அழிக்கும் செயலான இந்த வாக்குத் திருட்டு முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் திமுக உறுதியாக உடன் நிற்கிறது. இந்திய மக்களாட்சியைப் பட்டப்பகலில் பாஜக. திருடிச் செல்வதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மகா​ராஷ்டி​ரா, கர்​நாட​கா, ஹரி​யானா போன்ற மாநிலங்​களில் ஏராள​மான வாக்​காளர்​கள் போலி​யாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். ஏராள​மான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி குற்​றம் சாட்டி இருந்தார்.

மேலும், நேற்று அவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில், “வாக்கு திருட்டு என்​பது ஒரு​வருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்​படை நோக்​கத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதலாகும். தெளி​வான வாக்​காளர் பட்​டியல் என்​பது​தான், நேர்​மை​யான சுதந்​திர​மான தேர்​தலை உறுதி செய்​யும். தேர்​தல் ஆணை​யத்​திடம் நாங்​கள் வைக்​கும் கோரிக்கை எல்​லாம் தெளி​வாக உள்​ளது. தேர்​தல் ஆணை​யம் வெளிப்​படை​யாக செயல்பட வேண்​டும்.

மின்​னணு வாக்​காளர் பட்​டியலை வெளி​யிட வேண்​டும். அப்​போது​தான் நாட்டு மக்​களும் அரசி​யல் கட்​சிகளும் அதை ஆய்வு செய்ய முடி​யும். எங்​களு​டைய இந்த கோரிக்​கையை வலி​யுறுத்தி பிரச்​சா​ரம் தொடங்​கு​கிறோம். அதற்​காக ‘http://votechori.in/ecdemand’ என்ற புதிய இணை​யதளத்தை தொடங்கி வைக்​கிறோம். அத்​துடன் 96500 03420 என்ற செல்​போன் எண்​ணை​யும் வெளி​யிடு​கிறோம். இணை​யதளத்​தில்பொது​மக்​கள் தங்​கள் கருத்​துகளைக் கூறி, பிரச்​சா​ரத்​தில் பங்​கேற்க வேண்​டும். செல்​போனில் மிஸ்டு கால் கொடுத்து பிரச்​சா​ரத்​தில் இணை​ய​லாம்.” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று பிரம்மாண்டப் பேரணி நடைபெறவுள்ளது.

இண்டியா கூட்டணி இன்று பேரணி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்துகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். காலை 11.30 மணியளவில் இந்தப் பேரணி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ராகுலின் முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.



By admin