• Thu. Mar 6th, 2025

24×7 Live News

Apdin News

தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது? என்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன?

Byadmin

Mar 6, 2025


தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?

பட மூலாதாரம், TNDIPR

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலமான தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு புதன்கிழமையன்று (மார்ச் 05) அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எந்தக் கட்சி, என்ன பேசியது? என்ன தீர்மானிக்கப்பட்டது?

இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளின் அடுத்த மறுசீரமைப்பு 2026க்கு பிறகு நடத்தப்பட வேண்டுமென 2001ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.

இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகையின் அடிப்படையில்தான் நடக்கும். ஆகையால், 1970களில் இருந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கடுமையாகக் குறைக்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். மொத்தம் 63 கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

By admin