• Wed. Dec 3rd, 2025

24×7 Live News

Apdin News

தொடரும் கனமழை: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை? புது அப்டேட்

Byadmin

Dec 3, 2025


திட்வா புயல், தமிழ்நாடு, சென்னை, கனமழை, பள்ளி, கல்லூரி விடுமுறை

பட மூலாதாரம், IMD

படக்குறிப்பு, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை குறிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வரைபடம்

வலுவிழந்த திட்வா புயலில் எஞ்சியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையில் தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்தது. வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை மற்றும் அதையொட்டிய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, காலை 5.30 மணி நிலவரப்படி அதே இடத்தில் நிலை கொண்டிருந்தது.” என்கிறது வானிலை ஆய்வு மைய அறிக்கை.

அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து படிப்படியாக வலு குறைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அடுத்த 24 மணி நேரத்தில் மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

By admin