யாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடல் நீரேரியில் இருந்து இன்று மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்குத் தகவல் வழங்கினர்.
உயிரிழந்தவர் பற்றிய விவரங்கள் அடையாளம் தெரியப்படாத நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தொண்டைமானாறு கடல் நீரேரியில் பெண்ணின் சடலம்! appeared first on Vanakkam London.