• Thu. Sep 18th, 2025

24×7 Live News

Apdin News

தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு அக்கறை செலுத்தாவிட்டால் போராடுவதை தவிர வழியில்லை: பெ.சண்முகம் கருத்து | P Shanmugam says If the govt does not pay attention to the demands of the workers there is no choice but to fight

Byadmin

Sep 18, 2025


சென்னை: தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற்ற அக்​கறை செலுத்​த​வில்லை என்​றால் போராடு​வதை தவிர வழி​யில்லை என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​துள்​ளார். கட்​சி​யின் அகில இந்​திய பொதுச்​செய​லா​ளர் மறைந்த சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலாம் ஆண்டு நினை​வு​தின சொற்​பொழிவு சென்​னை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இதற்கு கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தலைமை வகித்து பேசி​ய​தாவது: மாநில அரசின் உரிமை​களை பாது​காக்க நடத்​தப்​படும் போராட்​டம் வெல்ல வேண்​டும் என்​ப​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி உடன்​பட்டு நிற்​கிறது.

அந்த போராட்​டம் வெல்​வதற்​கான முழு ஆதர​வை​யும் கட்சி வழங்​கும். அதே​நேரத்​தில் தமிழக அரசு, தமிழக தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​று​வ​தில் உரிய அக்​கறை செலுத்​த​வில்லை என்​றால் அதை எதிர்த்து போராடு​வதை தவிர, அரசின் தொழிலா​ளர் விரோத அணுகு​முறையை கண்​டிப்​பதை தவிர வேறு​வழி​யில்​லை.

மாநில அரசின் உரிமைக்​கான போராட்​டம் வெற்​றியடைய வேண்​டியது எவ்​வளவு முக்​கியமோ, அதே​போல் தொழிலா​ளர்​களின் நியாய​மான கோரிக்​கைகளும் வெற்​றி​பெற வேண்​டியது முக்​கி​யம். தமிழகத்​தில் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​கள் 30 நாட்​களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வரு​கின்​றனர்.

தூய்மை பணி​யாளர்​கள் போராட்​டம் நடத்​தி​ய​போது உயர் நீதி​மன்​றத்தை பயன்​படுத்​தி, அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். தாம்​பரத்​தில் ஒப்​பந்த தொழிலா​ளி​யாக பணி​யாற்றி வரும் ஆயிரக்​கணக்​கான வெளி​மாநிலத்​தவர்​கள் தங்​கும் வசதி​யின்றி தவித்து வருகின்றனர்.

எந்​த​வித அடிப்​படை வசதி​களும் இல்​லாமல் கொடுமை​யான சுரண்​டல் ஒப்​பந்த முறை தமிழகத்​தில் நடந்து கொண்​டிருக்​கிறது. இதைப்​பற்றி மாநில அரசு கவலைப்பட வேண்​டும். தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகள் மீது தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி தீர்வு காண வேண்​டும். அதை​விடுத்து பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்கே அதிக காலம் எடுத்​துக்​கொண்​டால் அது நியாய​மான அணுகு​முறை​யாக இருக்​காது. அதை ஆட்​சி​யாளர்​கள் சிந்​திக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.



By admin